அமைச்சர் சிவசங்கர் சொன்ன முக்கிய தகவல் | transport

Update: 2023-12-22 08:06 GMT

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நெல்லை உள்பட 4 மாவட்ட பணிமனையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் குறிப்பிட்டார். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், 55 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்