தோட்டத்தை சூறையாடிய யானைகள்...அலுவலகம் முன்பு படுத்த விவசாயி - ஓசூரில் பரபரப்பு

Update: 2024-01-27 15:00 GMT

ஓசூர் அருகே, மாமரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்திய விரக்தியில், வனத்துறை அலுவலகம் முன்பு படுத்து விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மாமர தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் 50க்கும் மேற்பட்ட மரங்களையும், தண்ணீர் பைப்புகளையும் சேதப்படுத்தின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி உரிய இழப்பீடு கோரி வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்