"போட்டு ஒரே வாரம் தான்..அதுக்குள்ள..மொத்தமா போச்சு"வெள்ளத்துக்கு முன்னே காணாமல் போன கால்வாய்

Update: 2023-08-28 10:58 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே கழிவுநீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், ஒரு வாரத்திற்குள்ளேயே சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கழுமரம் ஊராட்சியில், 12 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்