விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகரில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பெரும்பாலான மகளிருக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.