சாலை மறியலில் பொதுமக்கள்.. தாமதமாக வந்த அரசு அதிகாரி - நடுரோட்டில் கேள்விகளால் துளைத்த டிஎஸ்பி

Update: 2023-09-11 03:00 GMT

திருப்பத்தூரில் தாமதமாக வந்த நகராட்சி அதிகாரியுடன் டிஎஸ்பி வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் 7-ஆவது வார்டில், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வார்டு கவுன்சிலர் ராணி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில், பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு வந்த நகராட்சி பொறியாளர் சத்தியமூர்த்தியிடம், தகவல் கொடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக வருகிறீர்களா எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்