தகராறில் சரமாரியாக தாக்கப்பட்ட மனைவி.. மூடி மறைக்கப்பட்ட உண்மை சம்பவம்.. விசாரணையில் அம்பலமான தகவல்

Update: 2024-05-01 06:44 GMT

சென்னை, நாவலூர் அருகேயுள்ள ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரின் மனைவி வைசாலி. இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் ஒருவர் மீது ஒருவர் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், மனைவியை சரமாரியாக தாக்கிய விமல்ராஜ், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இதன் பின்னர் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறால் மனைவி உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி விமல்ராஜ் நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் அனைத்தும் அம்பலமானது. உடனே, விமல்ராஜை கைது செய்து போலீசார் சிறையிலடைத்த நிலையில், இது குறித்து மேலும் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்