கடையநல்லூர் அருகே நீர்வீழ்ச்சியில் தடையை மீறி குளித்து வரும் சுற்றுலா பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம், பழைய குற்றாலம் புலியருவி, ஐந்தாருவி மற்றும் தனியார் நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் உத்தரவை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.