"பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து" - பாஜக மூத்த தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2024-03-06 05:41 GMT

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த வழக்கில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதான் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எச்.ராஜா நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்