பள்ளி வாகனம் கவிழ்ந்து திடீர் விபத்து... சேலம் எடப்பாடி அருகே பரபரப்பு

Update: 2022-10-14 12:15 GMT

பள்ளி வாகனம் கவிழ்ந்து திடீர் விபத்து... சேலம் எடப்பாடி அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 23 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர்.

எடப்பாடி சின்னமுத்தூரில் உள்ள பூந்தளிர் காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கியுள்ளனர்.

இவர்கள் தினந்தோறும் ஒரு வேனில் எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரெட்டிபட்டி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்குச் சென்றுவிட்டு மாலையில் அதே வேனிலேயே காப்பகத்திற்கு வருவார்கள்.

வியாழக்கிழமை மாலை, பள்ளியில் இருந்து மாணவிகளை அழைத்துக் கொண்டு காப்பகத்துக்கு வந்த வேன், சின்னமுத்தூர் அருகே கனமழை பெய்ததால், நிலை தடுமாறி விவசாய வயலுக்குள் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேன் ஓட்டுநர் ஆனந்தராஜும், 23 மாணவிகளும் லேசான காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்