பெண்ணின் தலையில் கல்லை போட்டு பலாத்காரம் செய்த சைக்கோ - திருப்பூரில் நடுநடுங்க வைக்கும் கொடூரம்

Update: 2023-09-19 04:43 GMT

அவிநாசி மங்கலம் சாலை பைபாஸ் அருகே, மழைநீர் வடிகால் பாதையில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண் என தெரியவந்தது. சர்வீஸ் சாலையில் இருந்த எலக்ட்ரிக் கடை வாசலில் இருந்து, உடல் கிடந்த இடம் வரை இழுத்துச் சென்ற ரத்தக் கறை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்தக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தலையில் துணியை சுற்றியபடி வந்த நபர், தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், கொலையாளியை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்