வீட்டிற்குள் இருந்து வந்த கரும்புகை... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-09-09 04:05 GMT

விழுப்புரத்தில், பூட்டியிலிருந்த வீட்டில் இருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. அரகண்டநல்லூர் அருகே, மனம்பூண்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது மனைவி உயிரிழந்ததால், தனியாக வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். அவரது வீட்டிலிருந்து கரும்புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், அதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பிரிட்ஜை அணைத்தனர். வீடு முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்