கூவம் ஆற்றில் விழுந்த போதை ஆசாமி

சென்னை அண்ணா சாலை அருகே மதுபோதையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-02 06:08 GMT
காந்தி நகர் பகுதியை சேர்ந்த வில்சன் என்பவர், தனது மனைவி பிருந்தாவுடன் முத்துசாமி மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இருவரும் அதிக மது போதையால், சண்டையிட்டதாக கூறப்படும் நிலையில், மேம்பாலத்தின் சுவர் மீது அமர்ந்திருந்த வில்சன் நிலை தடுமாறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார், அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்