கொடநாடு வழக்கில் தொடரும் விசாரணை : குற்றம் சாட்டப்பட்ட 4வது நபர் ஜம்சீர் அலி நேரில் ஆஜர்

கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 வது நபரான ஜம்சீர் அலி நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-13 09:10 GMT
கொடநாடு வழக்கில் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4வது நபரான ஜம்சீர் அலி இன்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார். இவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் அப்போது ஆஜராகாத நிலையில் இன்று ஆஜராகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்