"அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்சி" - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Update: 2021-08-26 15:27 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அவர், கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை என்று கூறினார். இதனால் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு அரை மணி நேரமும் 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாக  அரை மணி நேரமும் ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்