தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 405 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்

Update: 2021-06-09 16:53 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்தமிழகத்தில் இன்று 17 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு 
இன்று  405 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 94 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 258 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்