தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
சென்னை மண்ணடி பகுதியில் உள்ள பழமையான கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் திவாகரன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.