அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் குழு உடன் சலுகை, கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை - மு.க. ஸ்டாலின், முதலமைச்சர்

திருச்சி என்.ஐ.டி. இல் 360 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2021-05-21 17:46 GMT
அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் குழு உடன் சலுகை, கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை - மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் 

திருச்சி என்.ஐ.டி. இல் 360 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த உடன் செய்த பணிகளை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு உடன் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். மேலும்,  ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட, கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நாளே, மகிழ்ச்சியான நாள் என அவர் குறிப்பிட்டார். 

 தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்