ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்... அச்சத்தில் உறைந்த மக்கள்

கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

Update: 2021-05-19 11:57 GMT
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்... அச்சத்தில் உறைந்த மக்கள்
 
கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஜீவா, வசந்தா மற்றும் கலா ஆகியோர் சகோதரிகள். சிறுவயது முதலே இணைபிரியாமல் இருந்து வந்த இவர்கள் அடுத்தடுத்து வீடு கட்டு வாழ்ந்து வந்தனர். இவர்களில் வசந்தா என்பவரது மகன் லோகேஷ் க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக வசந்தா மற்றும் அவரது அக்கா தங்கை அனைவருக்கும் நோய்தொற்று பரவியுள்ளது. இதில் லோகேஷ் மட்டும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவரது தாய் வசந்தா , வசந்தாவின் சகோதரிகள் கலா ஜீவா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். கலாவின் மகன் பாபு என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்