சோதனை- தேர்தல் தொடர்பு உள்ளதா? விசாரணைக்கு பின் தெரியும் - சத்யபிரதா சாகு

வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-03-25 14:51 GMT
வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையின் சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும் என்றார். புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு கோவை சம்பவம் ஒரு உதாரணம் என்றும்  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்