7 மாத பெண் சிசு இறந்த நிலையில் மீட்பு - போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த 7 மாத சிசு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-10-10 10:40 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த 7 மாத சிசு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூனங்குளம் பகுதியில் சாலையில் பெண் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். குறை பிரசவத்தில் இறந்த நிலையில் குழந்தை பிறந்ததால் அதனை வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்