சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய கும்பல் - சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் பரபரப்பு

சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று, சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-10-08 07:14 GMT
சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று, சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மாக்கெட்டிற்குள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில் ஒருவர் காயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்