உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-30 13:40 GMT
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.பி.அன்பழகன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தநிலையில், சிகிச்சைக்காக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.   கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவருக்கு சிகிச்சை தொடரும் நிலையில், அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்