மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

Update: 2020-06-25 11:37 GMT
மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். Endocare Lab என்னும் தனியார் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். மற்றும் தமிழக சுகாதார துறையின் அங்கீகாரம் பெற்று தென் தமிழகத்திலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ள தனியார் கொரோனா பரிசோதனை மையம் என்ற அங்கீகாரத்துடன் துவங்கி உள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என பரிசோதனை நிலையம் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்