தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

Update: 2020-06-16 13:08 GMT
மே 31 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை,15 நாட்களில் 24 ஆயிரத்து171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.  மே 31 ஆம் தேதி வரை, சென்னையில் 15 ஆயிரத்து146 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 18 ஆயிரத்து 98 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மே 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக இருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 253 உயிரிழந்துள்ளதாக, மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்