பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்க கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-06-01 08:36 GMT
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.  தமிழக அரசால் எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டு முறை, அதிகாரிகள் கூட்டணியால், பாரதிதாசன் பல்கலை.யில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பதாகவும் அவ​ர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  'துறை அலகு' இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்க  ஆணையிடுமாறும் முதலமைச்சரை ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்