திருப்பரங்குன்றம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகனை மிதித்து தூக்கி வீசிய யானையால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் கோயில் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-05-24 16:37 GMT
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இதனை காளிமுத்து என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில்,காளிமுத்து யானையை குளிப்பாட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென யானைக்கு மதம்பிடித்து பாகனை மிதித்து தூக்கி விசியது. படுகாயமடைந்த பாகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கோயில் ஊழியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் யானை உள்ள பகுதியில் தடுப்பு அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானை தெய்வானைக்கு மூன்றாவது முறையாக மதம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்