"காய்கறி சந்தையில் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு : கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறியதால் அதிர்ச்சி"

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி தெருவில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், சந்தேகப்படும் படி, சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க நபரிடம் வியாபாரிகள் விசாரித்தனர்.

Update: 2020-04-27 12:01 GMT
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி தெருவில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், சந்தேகப்படும் படி, சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க நபரிடம் வியாபாரிகள் விசாரித்தனர். அப்போது திருச்சி கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக அந்த நபர் கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் தஞ்சை காசாநாடு புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மன நலன் பாதிக்கப்பட்ட நபர் போல காணப்பட்டதை அடுத்து அந்த நபரை, தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்