"சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டாம்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

சுருக்குமடி வலைகளை தடை செய்யக் கூடாது என வலியுறுத்தி, நாகையில் 54 கிராம மீனவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-16 12:13 GMT
சுருக்குமடி வலைகளை தடை செய்யக் கூடாது என வலியுறுத்தி, நாகையில் 54 கிராம மீனவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த மீனவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம், போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்