வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் - தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.

Update: 2020-03-11 19:14 GMT
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு  ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த கணக்கெடுப்பை ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்று வந்த கணக்கெடுப்பு பணி இந்த முறை முதல் முறையாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 கட்டமாக நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டத்தில்  வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகையை கணக்கீடும் பணியையும் நடத்த திட்டமிட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்காக 31 வகையான கேள்விகளை கேட்க அதில் வரையறை செய்யப்பட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்