வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி அருகே அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலில், சனீஸ்வரர் சன்னதிக்கு மஹாகும்பாபஷேகம் நடைபெற்றது.

Update: 2020-03-06 09:06 GMT
பொன்னேரி அருகே அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலில், சனீஸ்வரர் சன்னதிக்கு மஹாகும்பாபஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் சனீஸ்வரர் சன்னதி புதியதாக கட்டப்பட்ட நிலையில், மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை பூஜிக்கப்பட்ட புனித கலசங்களுக்கு சிவாச்சார்யார்கள் யாகம் நடத்தினர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கலசங்களை ஏந்தி, ஆலயத்தை வலம் வந்து மஷாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்