வடவள்ளி மர்ம பங்களா தொடர்பான வழக்கு - பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்
கோவை வடவள்ளியில் மர்ம பங்களா தொடர்பான வழக்கில் தொடர்புடைய ஷேக் வீட்டில் இருந்து பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கோவை வடவள்ளியில் மர்ம பங்களா தொடர்பான வழக்கில் தொடர்புடைய ஷேக் வீட்டில் இருந்து பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாமின் பெற்று வடவள்ளி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற ஷேக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கரும்புக்கடை வள்ளலார் நகரில் உள்ள ஷேக்கின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது 19 ஆயிரம் மதிப்பிலான பழைய 500, ஆயிரம் நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.