பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 16 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-07 12:50 GMT
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியானது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அருண், மணிகண்டன்  சந்தோஷ்குமார்,வசந்த் தமிழரசன், உள்ளிட்ட 16 பேரை பிடித்து தனிப்படை  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 7 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்