நடந்து சென்றவர் மீது இடித்து தள்ளிய கார் : அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு..!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது கார் இடித்து தள்ளிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Update: 2020-02-06 20:19 GMT
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது கார் இடித்து தள்ளிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்ற இளைஞர், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே வந்த சொகுசு கார் அவர் பின்னால் மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அவர் பலத்த காயத்துடன் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. 
Tags:    

மேலும் செய்திகள்