"நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தல் வழக்கு : குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உத்தரவு"

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-28 20:33 GMT
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர்  பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த இவ்வழக்கில், நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் சமமான வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளதால், மறு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், குலுக்கல் முறையில் ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்