தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை : வகுப்புகளில் பாடம் நடத்திய மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததால், மாணவர்களே பாடம் நடத்தினர்.

Update: 2019-12-15 04:46 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அரசு ​தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததால், மாணவர்களே பாடம் நடத்தினர். மிகவும் குறைவான மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வரும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்துள்ளதாகவும், மற்றொரு ஒரு ஆசிரியர் 11 மணி வரை வரவில்லை என கூறப்படுகிறது. எனவே மாணவர்களே பாடம் நடத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்