133-வது நாளாக, 120 அடியாக உள்ள மேட்டூர் அணை
சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், தொடர்ந்து, 33வது நாளாக முழுக் கொள்ளளவான 120 அடியாக நீடிப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், தொடர்ந்து, 33வது நாளாக முழுக் கொள்ளளவான 120 அடியாக நீடிப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் சீராக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. அணையின் நீரிருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி.யாக உள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.