அரசு பேருந்தின் கண்ணாடியை உடைப்பு : திமுக தலைமை கழக பேச்சாளர் கைது

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-13 22:05 GMT
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை திமுக தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன் கல்லால் அடித்து உடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்