கத்தார் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

Update: 2019-12-02 12:49 GMT
கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள  மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 6 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கத்தார் கடற்படையால் நவம்பர் 29 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களை மீட்க கோரி  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம்  தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்