குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து உதைத்த மக்கள்

கோவை காந்திநகர் பகுதியில், குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2019-12-01 06:25 GMT
கோவை காந்திநகர் பகுதியில், குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இப்பகுதியில் கட்டிட வேலை மற்றும் தோட்ட வேலைகளுக்கு செல்லும் சிலர் குடும்பமாக சாலைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவரை பிடித்து, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் சிவகங்கையை சேர்ந்த கார்த்தி என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திருச்சி, கோவை பகுதிகளில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.  
Tags:    

மேலும் செய்திகள்