"ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி" - மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-27 10:06 GMT
தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது வரலாற்று சாதனை என தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்