புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் : ஒரு மாதத்திற்கு பிறகு கரை திரும்பினர்

கச்சத்தீவு அருகே புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

Update: 2019-11-14 20:46 GMT
குமரி மாவட்டம் நீரோடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான அற்புதமாதா என்ற விசை படகில் 10 பேர் கடந்த மாதம் 13ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட கியார் புயலில் சிக்கிய மீனவர்கள், கல்பனி தீவில் கரை ஒதுங்கியுள்ளனர். படகும் புயலில் சேதமடைந்ததை அடுத்து, தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மீனவர்களையும், படகையும் வாடகை படகு மூலம் கரைக்கு கட்டி இழுத்து வரப்பட்டது. அப்போது அந்த படகும் திடீரென கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதனையடுத்து 10 மீனவர்ளும் கடலில் குதித்து நீந்தி மீட்பு படகில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்த சேரந்தனர். அவர்களை கண்ணீருடன் கட்டித் தழுவி உறவினர்கள் வரவேற்றது, காண்போரை  நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  
Tags:    

மேலும் செய்திகள்