கொடைக்கானல் : கேரளாவில் இருந்து படை எடுத்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2019-11-10 04:28 GMT
வாரவிடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். இதனால் மோயர்சதுக்கம், தூண்பாறை, குணாகுகை, பசுமைபள்ளதாக்கு உள்ளிட்ட இடங்களில்  மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாலை நேரத்தில் பெய்த சாரல் மழையில் நனைந்தபடியே நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்