"இசை, அர்ச்சகர் பயிற்சி பள்ளி அமைக்க கோரும் மனு : தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு"

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இசை, ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில் பயிற்சி பள்ளி அமைக்க , உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-05 20:05 GMT
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  இசை, ஓதுவார், அர்ச்சகர்  உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில்   பயிற்சி பள்ளி அமைக்க , உத்தரவிட கோரிய  மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு  நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு  முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும்,  மனுதாரர் கோரிக்கை குறித்து புதிய மனுவை, தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கி உரிய நிவாரணம் பெறலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்