தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

Update: 2019-10-17 08:04 GMT
கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர்


காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்யும் மழை காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி - கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

வெப்பம் தணித்த மழை - மக்கள் மகிழ்ச்சி


பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மழை எதிரொலி - அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்



திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத மீனவர்கள்



கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வெளுத்து வாங்கிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சி



ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மொடக்குறிச்சி, சின்னியம் பாளையம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில், வெளுத்து வாங்கிய கனமழையால், விவசாயிகளும் - பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்