"கயிறு, ஸ்டிக்கர்களால் மேலோங்கும் சாதிய உணர்வு" அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

மாணவர்களிடையே சாதிய உணர்வால் ஏற்படும் மோதலை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-15 03:12 GMT
மாணவர்களிடையே சாதிய உணர்வால் ஏற்படும் மோதலை தடுக்க,  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைதுதை கண்டித்து, சென்னை முகப்பேரில் நடந்த கண்டன கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல்வாதிகள், பள்ளி மாணவர்களின் கைகளில் சாதிய கயிறுகளை கட்டிவிடுவதும்,  வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி அனுப்புவதும் தான், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு சென்றதற்கு காரணம் என தெரிவித்தார். மேலும்,  இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்