புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்

புதுக்கோட்டை அருகே கல்யாணபுரம் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி மக்கள், ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-14 09:16 GMT
புதுக்கோட்டை அருகே கல்யாணபுரம் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி மக்கள், ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டு காலமாக இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்