தொடர் விடுமுறை எதிரொலி : கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2019-10-06 16:25 GMT
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையால் நேற்று பிரையண்ட் பூங்கா, பைன்பாரஸ், மோயர் பாய்ண்ட், பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்ததால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டிய நிலையில், குடைகளை பிடித்தபடி பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்