இறுதிச்சடங்கில் உயிருடன் இருந்த குழந்தை : பெற்றோர் அதிர்ச்சி

இறந்து விட்டதாக கூறி, டாக்டர்கள் அனுப்பி வைத்த குழந்தை, இறுதிச்சடங்கில் உயிருடன் இருந்ததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2019-10-01 20:44 GMT
இறந்து விட்டதாக கூறி, டாக்டர்கள் அனுப்பி வைத்த குழந்தை, இறுதிச்சடங்கில் உயிருடன் இருந்ததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம், தஞ்சை அருகே உள்ள வயலூர் என்ற கிராமத்தில் நிகழ்ந்தது. தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு காய்ச்சல் என கொண்டு வரப்பட்ட பாஸ்கரன் - பிரீத்தி தம்பதியின் ஒரு வயது குழந்தை கெவின்,  இறந்து விட்டதாக கூறி, டாக்டர்கள், திருப்பி அனுப்பி வைத்தனர். சொந்த ஊரில், இறுதிச்சடங்குக்காக, சவப்பெட்டியில் குழந்தையை தூக்கி வைத்தபோது, உடலில் அசைவு ஏற்பட்டதால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மீண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். குழந்தை கெவினை பரிசோதித்த டாக்டர்கள், 4 மணி நேரத்திற்கு முன்பு தான் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் உறவினர்கள், டாக்டர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்