11-ஆம் வகுப்பு - 2ம் தொகுதி புத்தகம் விற்பனை

11 ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னை - டிபிஐ வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் குவிந்தனர்.

Update: 2019-09-30 12:39 GMT
11 ம்  வகுப்பு பாடப்புத்தகங்கள் வாங்குவதற்காக , சென்னை - டிபிஐ வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் குவிந்தனர். நடப்பாண்டில் பள்ளி திறக்கப்பட்டதும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் ஒரு தொகுதி பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப் பட்டன.  இரண்டாம் தொகுதி பாடப் புத்தகங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்த பெற்றோர், கூடுதல் கவுண்டர்களை திறக்குமாறு, பாட நூல் கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்