5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அரசு ரத்து செய்ய வேண்டும்

புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் சூழ்நிலை உருவாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.

Update: 2019-09-17 12:11 GMT
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை  வெளியிட்டுள்ள தமிழக அரசை கண்டித்து வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பள்ளி காலத்தில் ஐந்து பொது தேர்வுகளை எதிர்கொண்டால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்பதால் இதனை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்